விருதுநகரில் காசநோய் பரிசோதனை வாகனம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகரில் காசநோய் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை செய்யும் வாகனத்தை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

Update: 2021-12-24 06:52 GMT

விருதுநகரில் காசநோய் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை செய்யும் வாகனத்தை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கிராமபுற மக்களுக்கு அவர்கள் இருப்பிடம் சென்று காசநோய் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி காசநோய் பரிசோதனை செய்யும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 11 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் பரிசோதனை நடத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க எதுவாக சிறப்பு விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சார வாகனத்தை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்

இந்த வாகனம் ஒரு மாத காலம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம பகுதியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News