மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் அரசு சந்திக்கும்: அமைச்சர்

மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் தமிழக அரசு சந்திக்கும். விருதுநகரில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி

Update: 2021-11-05 10:30 GMT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்.

விருதுநகர் பள்ளியில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ஆஷா, பாஷா உயர்நிலை பள்ளியில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின்போது மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏதும் உள்ளதா? பள்ளியில் பாதுகாப்பான சூழல் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கு வருவது பிடித்துள்ளதா? என கேட்டதற்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தனர். அப்போது மாணவி ஒருவர் பூ கொடுத்து அமைச்சரை வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உயிரிழப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் தமிழக அரசு சந்திக்கும். கடந்த கால வரலாற்றில் இனத்தில், சமுதாயத்தில், மொழியில் மறைத்ததை மாற்றப்பட்டதை மாற்றி அமைத்து வருகிறார் தமிழக முதல்வர்.

அதிமுக திமுகவை பாராட்டாது அப்புறம் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். என பேட்டியளித்தார். ஆய்வின்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி உடனிருந்தார்.

Tags:    

Similar News