பொதுமக்களுக்கு இலவச கபசுரக்குடிநீர் வழங்கல்

Update: 2021-04-18 07:45 GMT

விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கினர்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ பரவலை தடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News