முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய உத்தரவு: தனிப்படை விரைவு

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து எஸ்பி மனோகர் உத்தரவு.

Update: 2021-12-17 13:54 GMT

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவு. கைது செய்ய திருச்சி சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு தனிப்படையினர் விரைவு

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவரை கைது செய்ய துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் 3 சார்பு ஆய்வாளர்கள் 15 தலைமை காவலர்கள் உள்ளிட்ட மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்ய தனிப்படை போலீசார் கைது செய்ய திருச்சி சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்தனர்.

Tags:    

Similar News