விருதுநகர் அருகே 4 மாத கர்ப்பிணி பெண் மர்ம உயிரிழப்பு: போலீசார் விசாரணை

விருதுநகர் அருகே சித்தூர் பகுதியில் சுவரின் இடுக்கில் 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த நிலையில் மீட்பு. போலீசார் விசாரணை.

Update: 2021-12-28 04:09 GMT

விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட கர்ப்பிணி பெண் நாகலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

விருதுநகர் அருகே சித்தூர் பகுதியில் சுவரின் இடுக்கில் நான்கு மாத கர்ப்பிணி பெண் இறந்த நிலையில் மீட்பு விபத்தா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் லட்சுமி நகரைச் சார்ந்தவர் நாகலட்சுமி சிறு வயதிலேயே பெற்றோர் இல்லாத காரணத்தால் சித்தப்பா வீட்டில் வளர்ந்த இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்த கணபதி ராஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது நான்கு மாதமாக கர்ப்பமாக உள்ள நாகலட்சுமி மாலை தனது கணவரிடம் மொட்டை மாடியில் துணி உலர வைப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வெளியே சென்றுவிட்டு கணபதி ராஜா 2 மணி நேரம் கழித்து திரும்பி உள்ளார். தனது மனைவியை பல்வேறு பகுதியில் தேடி உள்ளார். மனைவி கிடைக்காததால் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது பக்கவாட்டுச் சுவர் பக்கம் அவரது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நாகலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வில்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது நாகலட்சுமி தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவர் இறப்பிற்கு வேறேதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Tags:    

Similar News