விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கொரானா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்டு தேசியக்கொடி கலர் பலூன்களை பறக்கவிட்டார்.
பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கலந்துகொண்டார்.