விருதுநகரில் முறையின்றி பத்திரப்பதிவு: பொதுமக்கள் தர்ணா

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-23 10:41 GMT

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை எனக் கூறி இருபதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5000 சதுர அடிக்கு மேல் இருக்கும் இடங்களை பத்திரப்பதிவு செய்யப்படாது என நேற்று அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இன்று விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவை நிறுத்தியுள்ளனர். இதே போல் 5000 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களை பதிவு செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் ஆகும்.

அதற்கான கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியும் பத்திரப்பதிவை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News