விருதுநகரில் சூறை காற்றுடன் கனமழை

விருதுநகரில் இன்று மாலை சூறை காற்றுடன் கனமழை பெய்தது

Update: 2021-07-01 16:30 GMT

விருதுநகரில் இன்று மாலை சூறை காற்றுடன் கனமழை பெய்தது

விருதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.

விருதுநகர் நகர் பகுதிகளான முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளும் புறநகர் பகுதிகளான சத்திரரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, வில்லிபத்திரி, சூலக்கரை, கருப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ந்த சீதோசண நிலை நிலவுகிறது. மழையால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சீதோசண நிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதே போன்று மாவட்ட த்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது.

Tags:    

Similar News