தீக்குச்சி ஆலையில் தீவிபத்து

விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீ விபத்து, 3 பேர் படுகாயம். சிவகாசி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி.

Update: 2021-03-14 03:03 GMT

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் (28) என்வருக்கு சொந்தமான துர்கா கலர் மேச் பேக்டரி உள்ளது. இன்று மாலை மத்தாப்பு காயவைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென பற்றிய தீயில் அந்த அறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வீராச்சாமி புதுராஜன், நடராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 80% தீக்காயத்துடன் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பஞ்சவர்ணம் என்ற தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News