முழு ஊரடங்கு - வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில் சோதனை

விருதுநகர் முழுவதும் 65 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2021-05-24 04:50 GMT

வெறிச்சோடி காணப்படும் விருதுநகர்.

முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொரோனோ பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் சாலைகள் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகர் முழுவதும் 65 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப்பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ தேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தேவையின்றி சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுடன் மீண்டும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News