விருதுநகர் மாவட்டம்- முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு நாளில் கொரோனா தொற்று நபர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது.

Update: 2021-05-22 20:55 GMT

கொரோனா ( மாதிரி படம்)

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் முதல் அலை கண்டறியப்பட்ட நாளிலிருந்து நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக பதிவாகி வந்த நிலையில் இன்று முதல் முதலாக ஒருநாள் பாதிப்பாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1287 என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவுதல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் முதலாக ஒருநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1287 எனவும் இன்று ஒரே நாளில் 8 நபர்கள் தொற்றல் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று 620 நபர்கள் குணம் அடைந்து இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags:    

Similar News