விருதுநகரில் விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

விருதுநகரில் விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் பாஜக தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிரிவு சார்பில் நடைபெற்றது

Update: 2021-09-10 07:45 GMT

விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகரில் விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிரிவு சார்பில் நடைபெற்றது.

விழிப்புணர்வு பிரச்சாரம் விருதுநகர் அம்மன் கோவில் திடலில் இருந்து மெயின் பஜார் வழியாக நெல்கடை மைதானம் வரை தண்டோரா போட்டு விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விநாயகருக்கு அருகம்புல் மாலையணிவித்தும், செல்பி எடுத்தும் விநாயகரை வரவேற்றனர். விழிப்புணர்வு பிரச்சாரத்தை விருதுநகர் சட்ட மன்ற வேட்பாளர் பாண்டுரங்கன் துவக்கிவைத்தார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் குமரேசன், செல்வகுமார் தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News