பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-01-06 14:23 GMT

விருதுநகர் மாவட்டம் பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியின்போது ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கலந்தாலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் நடைபெறும் விபத்துகளைத் தவிர்ப்பது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விபத்துகiளைக் குறைக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News