விருதுநகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுதல், அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தடுப்பது, அனைவருக்கும் இலவச தடுப்பூசி உடனடியாக வழங்கல், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் போன்றவற்றை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.