பாய்ச்சலூர் மாணவி காெலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவியை பெட்ராேல் ஊற்றி எரித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Update: 2021-12-24 13:02 GMT

பள்ளி மாணவியை பெற்றோல் ஊற்றி எரித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி மாணவியை பெற்றோல் ஊற்றி எரித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடைக்கானல் அருகே உள்ள பாய்ச்சலூர் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துவந்த சிறுமி பிரித்திகா பள்ளி மைதானத்தில் மர்மமான முறையில் கயவர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் மேலும் அந்த கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏராளமானோர் திரண்டிருந்து சிறுமியை கொலை செய்தவர்களையும் கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News