விருதுநகரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-11-22 07:58 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தவறிய திமுக அரசை கண்டித்து பாஜகவினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தவறிய திமுக அரசை கண்டித்து பாஜகவினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உச்சமடைந்த வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று மத்திய அரசு சார்பாக பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டது இதையடுத்து பல மாநிலங்களை ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையை ஒரு அளவுக்கு குறைத்தன ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆளும் திமுக அரசு இதுவரை பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை இதை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக வெறுப்பு அரசியல் நடத்தும் திமுகவை கண்டித்து200 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News