கொரோனா தடுப்பு பணி- அருப்புக்கோட்டை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்.

முன்களப்பணியாளர்களுக்கு 3 அடுக்கு மாஸ்க் வழங்க வேண்டும்.

Update: 2021-05-17 07:59 GMT

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் என்ன தேவையென்றாலும் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகளிடம்  வருவாய்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

அருப்புக்கோட்டை பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரதுறை, நகராட்சி, ஊராட்சி , அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் தங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உடனடியாக என்னென்ன தேவைகள் உள்ளது எனவும் கேட்டறிந்தார்.

மேலும் முன்களப்பணியாளர்களுக்கு 3 அடுக்கு மாஸ்க் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் மேலும் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தாலும் ரெம்டெசிவர் கூடுதலாக தேவை என்றாலும் உடனடியாக ஏற்பாடு செய்துதருவதாகவும் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்

அப்போது அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மாஸ்க் , ஆக்ஸிஜென் செறிவூட்டி உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் உபகரணங்களை உடனடியாக ஏற்பாடு செய்துதருவதாகவும் உறுதியளித்தார் மேலும் காவல்துறை அதிகாரிகளிடம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேவையில்லாமல் சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார் கொரோனா தடுப்பு பணியில் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகளிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்

Tags:    

Similar News