விழுப்புரத்தில் மத்திய குழு உறுப்பினருக்கு வாழ்த்து
விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி சார்பில் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.சண்முகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் இன்று விழுப்புரம் வந்திருந்தார்.
அவருக்கு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி பொன்னாடை அணிவித்து, மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், ஆர்டி.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.