இலவச வேட்டி சேலை வழங்கவில்லை : வாலிபர் நூதன போராட்டம்

விழுப்புரம், வளவனூர் பகுதி வாலிபர் இலவச வேட்டி,சேலை வழங்காததால் அரை நிர்வாணத்துடன் பொங்கல் வைத்து போராட்டம் செய்தார்.

Update: 2022-01-15 14:26 GMT

அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்.

விழுப்புரம் :

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட வளவனூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பிரகாஷ்(37).  இவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில்  உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, பொங்கலுக்கு அரசு வழங்கும்  இலவச வேட்டி சேலை தனக்கு இதுவரை வழங்கபடவில்லை என குற்றம்சாட்டி அரை நிர்வாண கோலத்தில் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News