அரசு சட்ட கல்லூரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Government Law College Villupuram - விழுப்புரம் அரசு சட்ட கல்லூரியில், +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-02 01:30 GMT

வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள். 

Government Law College Villupuram -விழுப்புரம் அரப சட்ட கல்லூரி கூட்டரங்கில் கல்லூரி கனவு +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான், மாவட்ட ஆட்சியர் த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன், மாவட்ட எஸ். பி. ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்தினன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News