விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழை விட்டு வானம் வெளுத்து காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்தது, அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் வழிந்தோடி வருகிறது,
இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, மழையும் பெய்தது, காலை 8 மணிக்கு மேல் சூரியன் வெய்யில் மற்றும் வானம் மேகமூட்டம் கலைந்து, வென்மேகமாக காட்சி அளித்தது, மக்கள் அத்தியாவசிய தேவைக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்து பரபரப்பாக இயங்கினர்