திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் அதிக அளவு 111 மி மீ அளவு பதிவாகி உள்ளது

Update: 2021-10-06 05:54 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவை  இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

அதன்படி ஆரணி 55 மில்லி மீட்டர், செய்யாறு 102,   செங்கம் 34.60,     வந்தவாசி 40  ,    போளூர் 30.60 ,        திருவண்ணாமலை 25

தண்டராம்பட்டு 16.60 ,   கலசப்பாக்கம்  20  ,  கீழ்பெண்ணாத்தூர் 18.60,  வெம்பாக்கம் 111.

என மொத்தம் 523.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில்  பெய்த சராசரி மழைப் பொழிவு 43.60 சதவீதமாகும்.

Tags:    

Similar News