திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் அதிக அளவு 111 மி மீ அளவு பதிவாகி உள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவை இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
அதன்படி ஆரணி 55 மில்லி மீட்டர், செய்யாறு 102, செங்கம் 34.60, வந்தவாசி 40 , போளூர் 30.60 , திருவண்ணாமலை 25
தண்டராம்பட்டு 16.60 , கலசப்பாக்கம் 20 , கீழ்பெண்ணாத்தூர் 18.60, வெம்பாக்கம் 111.
என மொத்தம் 523.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த சராசரி மழைப் பொழிவு 43.60 சதவீதமாகும்.