உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.