மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த புகாரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Update: 2022-05-08 23:45 GMT

சித்தரிப்பு காட்சி. 

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) கலசபாக்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,  அவர் ஒருவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு சென்று,  உடனடியாக கடன் தொகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ,  சமூக வலைத்தளத்தில் பரவியது. அந்த சமயத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்,  மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் ஜெய்சங்கரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

Tags:    

Similar News