பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தி இணைய குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

Update: 2021-07-01 13:00 GMT

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் ஆன்லைனில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதாக கூறி தங்களின் சமூக வலைதள கணக்குகளின் username password, திருடி பணம் பறித்தல் போன்ற குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை,  பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்படவும். ஆன்லைனில் விலை மதிப்பு மிக்க பொருட்களை மிக குறைந்த விலைக்கு தருவதாக வரும் மோசடிகளை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவோம் இணைய குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம் என மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News