திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை

அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது.

Update: 2022-07-29 13:01 GMT

கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்,   கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 648-ம், 372 கிராம் தங்கமும், 708 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது  என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News