திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருவண்ணாமலையில் மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் கடந்த மாதம் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் முருகேஷ் , தலைமை தாங்கி வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், உதவி ஆணையர் (கலால்) குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.