திருவண்ணாமலை: உயர் மின் விளக்குகளை துவக்கி வைத்த எம் பி

திருவண்ணாமலை நகரில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அமைக்கப்பட்ட உயர் மின் விளக்குகளை எம்பி அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-05-06 07:06 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலை இவரை நெடுஞ்சாலை துறையின் மூலம் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை மாநில தடகள சங்க துணைத்தலைவர் மருத்துவர்  கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர்  பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி மண்டல பொறியாளர் ரகுராமன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம்,  நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மாவட்டத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன்,நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன்,  நகரமன்ற உறுப்பினர்கள்,   நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News