பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில், பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில சிறப்பு தலைவர் பாரதி தலைமை தாங்கினார். டாஸ்மாக் பகுதிநேர ஊழியர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.