ஜவ்வாது மலையில் கோடை விழா: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

23 வது கோடை விழா, ஜவ்வாது மலையில் நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-10 02:08 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 23 வது. கோடை விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்து பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ், விழா  நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து  கருத்துக்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சுலைமான், இணை இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன், கலசப்பாக்கம், போளூர், ஜவ்வாது மலை, வருவாய் கோட்டாட்சியர்கள், அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள்  கலந்து கொண்டு கோடை விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News