வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலையில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
நீதிக்கட்சியின் முதன்மையான தலைவரும், திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவரும் . சென்னை மாநகராட்சியின் தலைவராகப் பணியாற்றிய வரும், மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திக் கல்விச்சுடரை ஏற்றியவருமான 'வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172 வது பிறந்தநாள் இன்று திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் சர்.பிட்டி. தியாகராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் திருவுருவச் சிலைக்கு அமைப்பு சாரா தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
உடன் திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.