பேருந்தில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

Gutka - பேருந்தில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-08 01:28 GMT

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Gutka -பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக பேருந்துகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் நகரின் எல்லைப் பகுதியில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்த அய்யம்பாளையம் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்து மற்றும் திருவண்ணாமலை நகரம் ராமலிங்கனார் நகரை சேர்ந்த வடமலை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News