திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்: எம்பி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY) சார்பில் நடைபெற்ற விழாவை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவிப் பொறியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.