தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆட்சியர் அழைப்பு

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-05-25 01:33 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் கண்டு,  முதல் ரக அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை முகவர்கள் மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்து உள்ளது.

எனவே இதில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மண்டல மேலாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News