காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் வேலு ஆய்வு
திருவண்ணாமலை அருகே, காட்டாம் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், காட்டாம் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை, அமைச்சர் பார்வையிட்டார். முகாம் ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.