எம்ஜிஆர் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்: திருவண்ணாமலையில் அதிமுகவினர் மரியாதை
திருவண்ணாமலையில் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம் ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே அதிமுக நகர அதிமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், அதிமுக நகர செயலாளர் ஜே செல்வம், நகர மன்ற முன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.