திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-06-16 11:50 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.அதில் வேளாண்மை துறை, வருவாய் துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர் .

எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான மனுக்கள் அளிக்கலாம், அதன் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News