திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

Update: 2021-06-10 07:48 GMT

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ வேலு, அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு நிர்வாகிகள் வரவேற்றனர்,

அதனை தொடர்ந்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.2000 மற்றும் மகளிருக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது உடன் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News