திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த மூவர் 3 சக்கர வாகனத்துடன் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.

Update: 2022-04-28 07:30 GMT

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை நகரம், பேகோபுரம், 10-வது தெருவைச் சேர்ந்த சுரேஷ்  ,  பேகோபுரம், 4-வது தெருவைச் சேர்ந்த குமரவேல் ,  மற்றும் சட்டீஸ்கர் மாநிலம், ராயதார் மாவட்டம், குவாபுள் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மகேந்திரன் யாதவ்  ஆகியோர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் தீபம் நகரில்  தனியாக நின்று கொண்டிருந்த மூன்று சக்கர ஆட்டோவை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 900 கிராம் எடையுள்ள கஞ்சா கண்டறியப்பட்டது மேலும் 3 பேரையும் கைது செய்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் எடைள்ள கஞ்சா மற்றும் மூன்று சக்கர வாகனம் 1 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News