திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி பொறுப்பேற்றார்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திரு பவன் குமார் ரெட்டி, அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தார். மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி திருச்சி மாநகர துணை ஆணையராக பணிபுரிந்து தற்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.