சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Update: 2022-12-02 00:38 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. இதனை காண திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னை, புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பல்வேறு வழித்தடங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை அருகே தாம்பரத்தில் இருந்து வரும், 6, 7ம் தேதிகளில் காலை, 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நண்பகல், 12:15 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்

திருவண்ணாமலையில் இருந்து மதியம், 1:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை, 5:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலுார் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News