பொது இடங்கள் மற்றும் வீடுகளில் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

பொது இடங்கள் மற்றும் வீடுகளில் அந்நிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

Update: 2021-07-12 07:40 GMT

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் 

 பொது இடம் அல்லது வீடுகளில் அந்நிய நபர்கள் யாரேனும் உங்களை அணுகி , தங்களின் தனிப்பட்ட உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஆயர்வேத மருந்து தயாரித்து கொடுப்பதாக கூறி உங்களின் கவனத்தை திசை திருப்புதல், உங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப சிக்கல்களுக்கு ஜோதிடம் அல்லது மாந்தீரிகத்தின் வழியாக தோஷம் நிவர்த்தி செய்வதாக கூறி உங்களின் கவனத்தை திசை திருப்புதல்,  தங்களின் உறவினரின் உறவினர் அல்லது நண்பரின் நண்பர் என கூறி தங்களின் கவனத்தை திசை திருப்புதல்,  தங்களின் பணம், கைப்பை, செல்போன், பர்ஸ் மற்றும் நகை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கீழே விழுந்து விட்டதாக கூறி, தங்களின் கவனத்தை திசை திருப்புதல், மற்றும்  அரசிடமிருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண தொகை வாங்கி தருவதாக தங்களிடம் பேசி பழகி, தங்களின் கவனத்தை திசை திருப்புதல் மூலமாக பணம் அல்லது நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும், மேற்கண்டவாறு தங்களை யாரேனும் சந்தேகத்திற்கிடமாக உங்களை அணுகினால் உடனடியாக ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற எண் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்புகொள்ளவும்., என மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News