திருவண்ணாமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை நகரத்தில் நடந்த அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல்துறையினர்

Update: 2021-09-26 13:49 GMT

இன்று 26.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோரது தலைமையிலான தனிப்படை மாவட்ட காவல்   அதிரடிப்படை துணையுடன் திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்று வரும் பாலியல் தொழில் சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 புரோக்கர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்னர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாலியல் தொழில் நடந்த தங்கும் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News