திருவண்ணாமலையில் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-05 14:03 GMT

மாவட்ட செயலாளர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை, போளூர், கீழ்பென்னாத்தூர், செங்கம் ஆகிய தொகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டன.

திருவண்ணாமலை நகர மன்ற அதிமுக உறுப்பினர்கள் சார்பில் நல திட்ட உதவிகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ இன்று வழங்கினார்.

இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர மன்ற உறுப்பினர்கள் சந்திர பிரகாஷ், சீனிவாசன் மற்றும் ஆஷிஷ் உள்பட ஏராளமான அதிமுக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News