திருவண்ணாமலையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தார்கள்.

Update: 2022-09-19 10:48 GMT

திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.அதன்படி திருவண்ணாமலை செங்கம் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 பேரை கைது செய்தார்கள்.

இதில் நான்கு பேரின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த 19 கிலோ 110 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சாத்தனூர் செல்லும் வழியில் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 20 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்ததை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.

Tags:    

Similar News