திருச்சியில் இயற்கை மலர்க்கண்காட்சி: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Exhibition in Trichy-திருச்சியில், டெக்கரேட்டர்ஸ் நல சங்கம் சார்பில் இயற்கை மலர் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2021-09-25 13:45 GMT

தமிழ்நாடு டெண்டர்ஸ் அண்ட் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில், இயற்கை மலர் கண்காட்சி நடைபெற்றது. 

Exhibition in Trichy-தமிழ்நாடு டெண்டர்ஸ் அண்ட் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில், இயற்கை மலர் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லியோ முன்னிலை வகித்தார். இதில்,  மாவட்ட துணை செயலாளர் டோமினிக் வரவேற்றார்.

இதில், கொரோனா காலகட்டங்களில்,  எங்கள் தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். விபத்து காப்பீடு, தொழில் கடன்கள், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் தமிழக அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணைத்தலைவர் அருண் பிரசாத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மற்றொரு துணைச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். இதில் ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News