லால்குடி அருகே அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

லால்குடி அருகே அரியூர் ஸ்ரீதேவி பூதேவி வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2022-09-21 10:18 GMT

லால்குடி அருகே அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.


திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு மாலையுடன் சென்று, இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கி அடுத்த திருகல்யாணத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்தாண்டுக்கான திருக்கல்யாணம் உற்சவம் நேற்று 20 ம் தேதி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அரியூர் கிராம மக்கள் உட்பட விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News