திருவாரூரில் உலக முதியோர் தினத்தில் ஆதரவற்றோருக்கு உணவு
திருவாரூரில் உலக முதியோர் தினத்தையொட்டி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.
உலக முதியோர் தினம் அக்டோபர் 1-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் முதியோர்கள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ள சூழலில் தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்பது மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள திட்டமாகும். இதன் மூலம் அதிக அளவில் முதியவர்கள் பயன் அடைவர்.
இந்நிலையில் திருவாரூரில் ஆதரவற்ற முதியோர்களுக்கு திருவாரூர் கோகிலாம்மாள் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் இரா.சங்கர், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பெருந்தலைவர் முனைவர் எஸ்.டி.அண்ணாதுரை, பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் க.திருநாவுக்கரசு, ஆலோசகர் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.