திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது

Update: 2022-04-10 13:11 GMT

திருவாரூரில் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ்  சார்பில் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மைய குழந்தைகளுக்கு இன்றைய தினம் கிங்ஸ் சங்க தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையில் வழங்கப்பட்டது.

சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் முருகானந்தம்,கிங்ஸ் செயலாளர் உத்திராபதி,புலிவலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்தி, பழவனக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிங்ஸ் உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் இருபால் ஆசிரியர்கள், வட்டார வள மைய பொறுப்பாளர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News