தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழையால், திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையன்று, விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-02-11 23:45 GMT

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே,  தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்தது. 

மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிப்ரவரி 12, சனிக்கிழமை அன்று, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News